அப்பா இறந்து விட்டார் .
பிரேம் போட்ட புகைப்படமாய் சாமி அலமாரியில் இடம் பிடித்தார் .
மகன் வளர்ந்து கல்லூரி சென்றான் .
தாத்தா படத்தை ஹால் சுவற்றில் ஒரு ஓரமாய் மாட்ட ஆலோசனை சொன்னான் .
மருமகள் வந்து விட்டாள்.
தாத்தா படம் ஹாலை ஒட்டிய அறைக்குள் ஒரு மூலையில் இடம் பிடித்தது .
பேரன் பிறந்து வளர்ந்தான் .
தாத்தா படத்தை ஆல்பத்தில் வைக்க ஐடியா கொடுத்தான் .
பேரனுக்கு மனைவி வந்தாள்.
பழைய ஆல்பங்கள் அனைத்தும் இப்போது பரணியில்!